Monday 31 October 2011

வாழ்க்க ஒரு வட்டம்டா 2: ‘சவால் சிறுகதை-2011’




கார் ஒன்று கட்டுப்பாடு இல்லாமல் வேகமாக சென்று தடுப்புகளில் இடித்துவிட்டு ஒரு மரத்தில் மோதி நொருங்கியது.

சில தினங்களுக்கு முன்..
கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு பிரபல ஐந்து நட்சத்திர விடுதி.

ரெஸ்டாரண்ட்

“இன்னும் எவ்வளவு நாளைக்குதான் நாம இப்படி ரகசியமாக  சந்திப்பது. இனிமேல் ஒரு நிமிஷம்கூட காத்திருக்க முடியாது. உடனே ஒரு முடிவெடுங்க, குருவுக்கு என்மேல சந்தேகம் வர ஆரம்பிச்சிடுச்சுனு நினைக்கிறேன். அவரு பேச்சே சில நாளா சரியில்ல, எனக்கென்னவோ நம்மோட விஷயம் அவருக்கு தெரிஞ்சிடுச்சுனு தோனுது.” படபடப்புடன் கூறினால் திவ்யா.

“கொஞ்சம் பொறுமையா இரு, உன் கணவன் சாதாரண ஆளா இருந்தா எப்பயோ அவன் கதைய முடிச்சிருப்பேன். அவன கொலை பண்றது பெரிய விஷயமில்ல ஆனா ஒரு தடயமில்லாம கச்சிதமான   வேலைய முடிக்கனும். நீயும் நானும் பழகற விஷயம் வெளிய தெரிஞ்சா முதல் குற்றவாளியா நம்ம ரெண்டு பேரதான் பார்ப்பாங்க, இன்னும் ரெண்டு வாரத்துல அவன் சென்னை வருவதாக  சொன்னல அப்ப அவன தீர்த்துகட்ட கூலிப்படைய தயார் பண்ணிட்டேன், அவன் கொலை ஒரு விபத்து மாதிரிதான் வெளிய தெரியும். ”

“எனக்கென்னவோ பயமா இருக்குங்க”

“நீ கவலைபடாத எல்லாத்தையும் நான் பார்த்துக்குறேன்.”
------------------------

அதே ஓட்டலின் பாரில் குணா மற்றும் ராஜா.

“எப்படா சரக்கு வருது”

“இன்னைகு ராத்திரி சரக்கு கைக்கு வந்திடும், இவ்வளவு நாளா பிரச்சனை பண்ணிட்டிருந்த  போர்ட் கஸ்டம்ஸ் ஆபிஸரும் திடீர்னு ஒ.கே சொல்லிட்டாரு, பல கோடி ருபாய் மதிப்புள்ள சரக்கு  கைமாறும் போது நமக்கு கமிஷனா ஆறு லட்சம் குபாய் கிடைக்கும். எஸ்.பி கோகுல் தான் இந்த டிவிஷன்ல இருக்காரு, அதனால நமக்கு எந்த பிரச்சனையில்லாம சென்னை எல்லைய தாண்டிடலாம். போர்ட் கிட்ட இருக்குற N4 மீன்பிடித்துறைமுகத்துக்கு வரும் சனிக்கிழமை சரக்க எடுத்துட்டு வரச்சொல்லியிருக்கார்.”

“மச்சி, இன்னும் எவ்வளவு நாளைக்குதான் மத்தவங்களுக்காக உயிர பணயம் வெச்சு வேல செஞ்சு அவங்க குடுக்குற எச்ச காசுக்காக அலையுறது. எங்கிட்ட ஒரு ப்ளான் இருக்கு, உனக்கு ஓ.கேனா சொல்லு.”

“அமாம்டா இப்படி சின்ன சின்ன கடத்தல் வேல பார்க்குறதுக்கு ஒரு பெரிய ப்ளான் பண்ணி செட்டிலாகிடனும். அப்பறம் ஜாலியா வாழ்க்கைய எஞ்சாய் பண்ணனும். நீ என்ன யோசிச்சு வெச்சிருக்கனு சொல்லு.”

“இன்னைக்கு கிடைக்குற சரக்கோட மதிப்பு பத்து கோடி, அத நாம எஸ்.பி கோகுல்கிட்ட பத்திரமா ஒப்படைக்கிறதுதான் உத்தரவு. எப்படியும் எஸ்.பி தனியா வருவான். நேரம் கிடைக்கிறப்போ அவன போட்டுத்தள்ளிட்டு சரக்கோட இந்த நாட விட்டே எஸ்கேப் ஆகிடலாம்.”

“மச்சி நீ சொல்றதெல்லாம் நல்லாதான் இருக்கு, ஆனா அந்த எஸ்.பி ரொம்ப மோசமானவன், அவங்கிட்ட ரொம்ப கவனமா  இருக்கனும்.”

“நீ கவலைபடாத மச்சி, எல்லாத்தையும் நான் பார்த்துக்குறேன்.”

------------------------
ஓட்டலின் ஒரு அறையில் சி.ஐ.டி. தலைவர் அர்ஜுனனும், உளவாளி விஷ்னு.

“சார் ரொம்ப நாளா நாம தேடிகிட்டிருந்த கடத்தல்காரர்களின் நெட்வர்க்ல ஒரு பெரிய துப்பு கிடச்சிருக்கு, அந்த கடத்தல்காரர்களுக்கும் நம்ம டிபார்ட்மென்ட்ல இருக்குற ஒரு உயரதிகாரிக்கும் தொடர்பு இருக்கு. அதனால தான் ஒவ்வொரு தடவையும் நாம சோதனைகல பலப்படுத்தும் போதும் நமக்கு ஒன்னும் சிக்கறதில்ல.”

“அது யாருனு கண்டுபிடிச்சுட்டீங்களா?”

“நம்ம எஸ்.பி. கோகுல் தான் சார் அது.”

“என்ன  விஷ்னு சொல்றீங்க, நம்பவே முடியல, நீங்க சொல்றது உண்மையாகவே இருந்தாலும், ஒரு வலுவான ஆதாரமில்லாம்  நம்மலால ஒன்னும் பண்ண முடியாது.”

“நம்ப எஸ்.பி இதுல சம்பத்தப்பட்டிருக்கார்னு தெரிஞ்சதுமே நான் முழு வீச்சுல ஆதாரங்களை சேகரிக்க ஆரம்பிச்சேன், அடுத்த சனிக்கிழமை ஒரு மிகப்பெரிய கள்ள வியாபாரம் நடக்க போகிறது, அதுக்கு உதவபோறது எஸ்.பி.தான். சரியான நேரத்துல போனா அந்த கடத்தல்காரர்களோட சேத்து எஸ்.பி. கோகுலையும் அரஸ்ட் பண்ணிடலாம்.”

“விஷ்னு நீங்க அந்த கடத்தல் கூட்டத்த தொடர்ந்து கண்காணிச்சுட்டு இருங்க, அவங்க ப்ளான்ல ஏதாவது மாற்றம் இருந்தா சொல்லுங்க, சென்னைய கலக்கிட்டிருக்க அந்த கூட்டத்த கூண்டோட கைது பண்ணனும். உங்க பாதுகாப்பிற்காக துப்பாக்கி பயன்படுத்த முழு அனுமதி கொடுக்குறேன்.”

“ரொம்ப நன்றி சார், இந்த விஷயம் டிபார்ட்மென்ட்ல  நம்ம ரெண்டு பேர தவிர வேற யாருக்கும் தெரியாது, பின்னர் ஏதாவது பிரச்சனைனா நீங்க ஒருவர்தான் என்ன காப்பாத்த முடியும்.”

“ நீங்க எதுக்கும் கவலபட வேணாம், எந்த பிரச்சனை வந்தாலும் நான் பார்த்துக்கொள்கிறேன்.”

------------------------
ஓட்டலுக்கு வெளியில் ஒரு டீ கடையில் தணா மற்றும் வின்ஸன்ட்

“மச்சி எவ்வளவு நாள்றா டாஸ்மாக்லெயே காலத்த தள்ளுறது, என்னைக்காவது ஒரு நாள் அந்த பைவ் ஸ்டார் பார்ல போய் சரக்கடிக்கணும்டா.”

“டேய் கவலையவிடு, அடுத்த வாரம் ஒரு வேல, சிம்பில் மர்டர், ஆள் பேரு குரு , கோடீஸ்வர வீட்டு புள்ள, நம்ம லாரிய விட்டு துக்கறதுக்கு பேரம் பேசி இருக்கேன், வேல முடிஞ்ச உடனே அஞ்சு லட்ச ருபாய் கையில நிக்கும். அட்வான்ஸா ஒரு லட்சம் பார்டி குடுத்திருக்கு. “

“ஆமா பார்டி யார்னு தெரியுமா?”

“எப்படா நம்ம அத பத்தி விசாரிச்சிருக்கோம், கையில காசு, வாயில தோசனு போயிட்டிருக்க வேண்டியதுதான்.”

“இல்லடா நாம போடற ஆளு கோடீஸ்வரனு சொல்ற, அப்பறம் ஏதாவது பிரச்சனை ஆகப்போவுது.”

“மிஞ்சி மிஞ்சிப்போனா ஆக்ஸிடன்ட் கேஸ்தான் ஆகும், நீ எதுக்கும் கவலபடாத, நான் எல்லாத்தையும் பாத்துக்குறேன்.”

------------------------

N4 மீன்பிடித்துறைமுகம் நேரம் அதிகாலை 2மணி.

குணா மற்றும் ராஜா இருவரும், கடத்தல் சரக்குடன் எஸ்.பி வருகைக்காக காத்துக்கொண்டிருந்தனர். சிறிது நேரத்தில் எஸ்.பி தனியாக காரில் வந்தார்.

“என்ன குணா ரொம்ப பதட்டமா இருக்க மாதிரி இருக்கு”

“இல்ல சார், பல கோடி ருபா சரக்கு, தலைவர் முதல் தடவையா எங்கள நம்பி அனுப்பிருக்கார், பத்திரமா இருக்கனும்ல அதான்.”

“சரி சரி சீக்கிரம் சரக்கெல்லாம் என் வண்டியில ஏத்து”

மறைத்து வைத்திருந்த கத்தியால் கோகுலின் கழுத்தில் குத்தினான் குணா, சில நொடிகளில் துடிதுடித்து இறந்தான்.

“ம்.. சீக்கிரம், சரக்க எஸ்.பி வண்டியில ஏத்து, அவரு வண்டினால எந்த பிரச்சனை இருக்காது, பத்து கோடி ருபாய் சரக்கு, மூனா பிரிச்சு, ஒரு பங்கு வித்துக்குடுக்குற ஏஜண்டுக்கு, மீதி ரெண்டு நமக்கு, 10 கோடிய மூனா பிரிச்சா என்னடா வரும்..//”

தன் கையிலிருந்த வீச்சருவாவை கொண்டு குணாவை வெட்டினான் விண்சன்ட்.

“ஏண்டா………”

“மச்சி நான் கணக்குல வீக்குனு தெரியுமுல, பத்து கோடிடா, அத ஏன் தேவயில்லாம பங்கு போட்டுகிட்டு.”

-----------------

விஷ்னு தன் கையிலிருந்த காகிதத்தை இறந்த எஸ்.பி கோகுலின் சட்டைப்பையில் தினித்தான்.

அடுத்த நாள் காலை சி.ஐ.டி. தலைமை அலுவலகம்.

“சார் எஸ்.பி. கோகுல் மர்மமான முறையில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார், அவரை கொலை செய்தவனும் அருகில் பிணமாக இருக்கிறான், அவர் சட்டைப்பையில் இந்த காகிதம் இருந்தது.” என ஒரு காகித துண்டை தலைவர் அர்ஜுனனிடம் கொடுத்தார் ஒரு ஊழியர்.

அதில் இருந்ததை பார்த்து படித்துக்கொண்டிருக்கும் போதே, விஷ்னுவிடமிருந்து அழைப்பு வந்தது.

“என்ன விஷ்னு"


" சார் நான் உங்களுக்கு அனுப்பின சீட்டு கிடைச்சுதா”

“ம். கிடச்சுது, இப்ப டேபில் மேலதான் இருக்கு, முதல்ல ஒன்னும் புரியில இப்பதான் இறந்த  கோகுலோட  சட்டைப்பையில் கிடச்ச காகிதத்தோட ஒத்துப்போகுது , எஸ்.பிய கொலை பண்ணவங்க யாரு, அங்க என்ன நடந்தது.”

“சார், நான் எஸ்.பிய தொடர்பு கொண்டு, ஏஜண்ட் போல பேசி, அடுத்த கடத்தல் பொருள் வர கண்டேயினர்னு சொல்லி ஒரு அடையாள குறியீட அவருக்கு அனுப்பினேன் அதுதான் அவர் சட்டைப்பையில் இருந்தது. அவரு கீழ வேல செஞ்ச பசங்களோட பணத்தாசையில அவர கொலை பண்ணியிருப்பங்கனு நினைக்கிறேன். இப்ப நான் அந்த கூட்டத்துல ஒருத்தனா மாறிட்டேன், அதோட தலைவர் யாருனு இன்னும் சில நாளுல கண்டுபிடிச்சுடுவேன்.”

“மீதி விஷயங்கள அப்பறம் பேசுறேன், என்னால தொடர்ந்து பேச முடியாது.”


விஷ்னு ஒரு காரில் ஏறி அமர்ந்தான்.

பாஸ், நான் உங்க கடத்தல் கூட்டத்துல சேர்ந்த மாதிரி சி.ஐ.டி தலைவரை நம்ப வச்சிட்டேன். எனக்கொரு சந்தேகம் பாஸ்.

என்னனு சொல்லு

“இல்ல இந்த எஸ்.பி கோகுல் உங்க மனைவியோட பழகுன ஒரே காரணத்துக்காகவா இந்த கடத்தல்ல ஒரு சம்பந்தமும் இல்லாத அவர சாமர்த்தியமா சிக்க வெச்சு அவர கொலை செய்தீங்க.”

“அவன் ஒரு தேசத்துரோகியாக்கனும்னு தான் நினைச்சேன், ஆனா அந்த பொடிப்பசங்க காசுக்கு ஆசப்பட்டு அவன ஒரேடியா முடிச்சுடானுங்க. ஆமா அந்த விண்சன்ட் என்ன ஆனான்”

“நம்ப ஆந்திரா டீலர்கிட்டயே விலை பேசியிருக்கான், அவனும் நம்ப சரக்கும் ரெட்டிகிட்ட பத்திரமா இருக்கு.”

“சரி அந்த ரேடியோவ போடு,” என விஷ்னுவிடம் கூறினான்.


பின்னால் வந்த லாரி அவர்கள் சென்ற காரில் மோத கட்டுப்பாடு இல்லாமல் வேகமாக சென்று தடுப்புகளில் இடித்துவிட்டு ஒரு மரத்தில் மோதி நொருங்கியது.

Thursday 27 October 2011

"எ"ஆம் அறிவு: அத்தியாயம் 7: உறவு


அத்தியாயம் 6

இதுவரை
மரபணுக்கள் மூலம் கடந்தகால நினைவுகளை சேகரிக்கும் பொறியை கண்டுபிடிக்கும் விஞ்ஞானி ராமானுஜம், அதை சோழர்களின் வாரிசான ரவி மூலம் சோதித்து, அவனுடைய கடந்த கால நினைவுகள் மட்டுமில்லாமல் அவனுடைய முன்னோர்களின் நினைவுகளையும்  சேகரிக்க முடியும், அதன் மூலம் எண்ணற்ற பயங்களை அடைய முடியும் என  ரவியை நம்பவைக்கிறார்.  ராமானுஜத்தின் உதவியாளராக திவ்யா ஆய்வகத்தில் வேலை செய்கிறாள்.  ராமானுஜம் ரவியிடம் ஒரு முக்கியமான தகவலை தெரிவிக்கும் வேளையில் முகம்தெரியாத ஒருவரால் சுடப்படுகிறார்.

இனி..

“ஹா, என்னை கடவுளாக்கும் தகுதியை அழிக்க நினைக்கும் துரும்பு இவனா.” ரவியை பார்த்து அந்த உருவம் கோபமாக கர்ஜித்தது.

தன் நினைவுகளில் பார்த்த அருண்மொழிவர்மனின் குருவின் சாயலில் ஒருவர் ஆய்வகத்தின் வாயிலின் முன் நிற்பதையும் தன் கண்முன் வீழ்ந்து கிடக்கும் ராமானுஜத்தின் உடலையும்  அதிர்ச்சியுடன் மாறி மாறி பார்த்துக்கொண்டிருந்தான் ரவி.

துப்பாக்கி சத்தம் கேட்டவுடன் திவ்யா எச்சரிக்கை அமைப்பின் பொத்தனை அழுத்த  ஆய்வகத்தை சுற்றி ஒரு இரும்புத்திரை அனைத்து வாயில்களையும் மூடியது.

“இனிமேல் தாமதிக்க நேரமில்லை உடனே நாம் இந்த இடத்தை விட்டு வெளியேற வேண்டும்.” திவ்யா அவசரப்படுத்தினாள்.

“இங்கு என்ன நடக்கிறது என்று தெரியாமல் நான் வருவதாக இல்லை”
என ரவி கூறியதை கேட்டு திவ்யா “போகும் வழியில் அனைத்தையும் விவரிக்கிறேன், இந்த இரும்புத்திரை நமக்கு சிறிது கால அவகாசம் தரும், அதற்குள் இங்கிருந்து வெளியேற வேண்டும்.” என பதிலளித்தாள்.

சில எண்களை கணிப்பொறியில் திவ்யா அழுத்த “சுய அழிவு முறை ஆரம்பம், இன்னும் இரண்டு நிமிடங்களில்,” என கணினி குரல் ஒலிக்க எச்சரிக்கை மணி அடிக்க ஆரம்பித்தது. ஆய்வகத்தின் நடுவில் ஒரு பிளவு ஏற்பட்டு ஒரு சுரங்க வழி உருவானது. திவ்யா அந்த வழியில் செல்ல ரவி அவளை பின்தொடர்ந்தான்.

“பயப்பட வேண்டாம்,  இன்னும் சற்று நேரத்தில் இந்த  தீவை விட்டு வெளியேறிவிடுவோம்”

“தீவா, பரவாயில்லையே இப்போதாவது நான் எங்கிருக்கிறேன் என்று தெரிந்ததே, பயமெல்லாம் எப்போதோ போய்விட்டது. ராமானுஜத்தின் நிலமையை நினைத்தால்தான் வருத்தமாக இருக்கிறது.”

“இதுபோல் நடக்கும் என்று முன்பே அறிந்திருந்ததால்தான் அவர் இவ்வளவு முன்னெச்சரிக்கையாக இந்த சுரங்கவழியையும், நாம் செல்லப்போகும் அதிவேக கப்பலும் தயார் நிலையில் வைத்திருந்தார்.”

“கப்பலா, பரவாயில்லையே நான் நீச்சலடித்துத்தான் போகவேண்டும் என்று நினைத்தேன்.”

படகில் ஏறிய திவ்யாவை தொடர்ந்து சென்றான் ரவி. பார்க்க ஒரு சாதாரண படகு போல் தோற்றமளித்தாலும் ஏறிய பின்புதான் அது ஒரு நீர்மூழ்கி கப்பல் என தெரிந்தது. தான் பார்த்தது ஒரு பிரம்மாண்டத்தின் ஒரு பகுதிதான் என்பதும் ரவிக்கு புரிந்தது.படகில் ஒரு இடத்தில் தன் கட்டைவிரலை வைக்க படகின் இயந்திரம் ஆரம்பமானது.

“வணக்கம் திவ்யா, இந்த நீர்மூழ்கி ஆய்வகம் உங்களை வரவேற்கிறது. இலக்கை சென்றடைய  ஒன்பது மணி முப்பது நிமிடம் உள்ளது.” என இயந்திர குரல் வரவேற்றது.

“இனி கவலையில்லை ரவி, இன்னும் ஒன்பது மணி நேரத்திற்கு எந்த கவலையில்லாமல்  நீங்கள் நிம்மதியாக இருக்கலாம்”

“ஹும், இங்கு என்ன நடக்கிறது என்று தெரியாமல் எப்படி நிம்மதியாக இருக்க முடியும், நடந்த விஷயங்களில் இருந்த வெளிவரவே பல மாதங்களாகும், பயணத்தில் எனக்கு அனைத்தையும் விவரிப்பதாக கூறினாய் அல்லவா, இப்போது சொல் இங்கு என்னதான் நடக்கிறது.”

“பிரம்பஞ்சத்தின் பிறப்பு பற்றி பல வாதங்கள் இருக்கிறது உங்களுக்கு அதை பற்றி  தெரியுமா?”


“நான் கேள்வி கேட்டால் அதற்கு பதிலாக இன்னொரு கேள்வியா, நான் ஒரு சாதாரண மனிதன், ஒரு விஞ்ஞானியை போல் என்னிடம் பேச வேண்டாம், என் நிலமையில் நீ இருந்து யோசித்துப்பார். எனக்கு தெரியவேண்டியதை மட்டும், அதாவது, ராமானுஜத்தை துப்பாக்கியால் சுட்டது யார், பார்பதற்கு என்னுடைய மூதாதயரான அருண்மொழிவர்மனின் குரு போல தொற்றமளிக்கிறார். அது உண்மையென்றால் அவரால் எப்படி இங்கு வர முடியும், அப்படியென்றால் கால இயந்திரம் என்று ஒன்று கண்டிப்பாக உள்ளதுதானே?”

“நீங்களும் ஒரு விஞ்ஞானி மாதிரிதான் இவ்வளவு விவரமாக பேசுகுறீர்கள், நீங்கள் பார்த்தது அருண்மொழிவர்மனின் குருவா என்பது எனக்கு தெரியாது, ஆனால் அவரின் பயணம் கால இயந்திரம் மூலம்தான் என்பதை மட்டும் நான் அறிவேன்.”

“கால இயந்திரமா? அப்படியென்றால் அவர் யார், அவரை எப்போது நான் தடுத்தேன், கடவுளாக போகிறேன் என்று சொல்கிறாரே அவர் என்ன பைத்தியமா ?

“இவ்வுலகத்தின் எதிர்காலத்தை கணிக்கும் இல்லை இல்லை தீர்மானிக்கும் சக்தி இருப்பவர் கடவுள் என்றால் அது அவர்தான்.”

“அப்படியென்றால் எப்படியும் அவரிடமிருந்து நம்மால் தப்பிக்க முடியாது அல்லவா, எதற்கு இந்த வீண் முயற்சி.”

“அந்த சக்தியின் மையம் அருண்மொழிவர்மனால் தான் கண்டுபிடிக்கப்பட்டது. அதனால்தான் உன் மரபணு நினைவுகள் மூலம் அந்த இரகசியத்தை அறிய முயல்கிறோம்.   அருண்மொழிவர்மனுக்கு பிறகு யார் அந்த சக்தியை அடைந்தார்கள், ஏன் இவ்வளவு காலம் காத்திருக்கிறார்கள் போன்ற பல கேள்விகளுக்கு உன் ஒருவன் மூலமே பதில் கிடைக்கும் என்று நம்பினோம். ”


 “உன்னிடம் ஒன்று கேட்க வேண்டும். என்னுடைய கடந்தகால நினைவுகள், அதாவது என்னுடைய இப்பிறவி நிகழ்வுகள் சுத்தமாக நினைவில் இல்லை, உங்கள் கழகத்தில் பிடிபடுவதற்கு முன்பு என்ன செய்துகொண்டிருந்தேன், நீங்கள் என்னை ரவி என்று அழைத்த பின்புதான் என் பெயர் தெரிந்தது.அது போல் இப்போது உன்னிடம் பேசும்போது மட்டும் என்னிடம் ஒரு வகை உணர்வு, எப்படி சொல்வதென்று தெரியவில்லை, ஆனால் உன்னை இதற்கு முன் எங்கேயோ பார்த்ததாக நினைவிருக்கிறது ஆனால் எங்கு என்று மட்டும் புலப்படவில்லை.”

“ம்.. இனி மறைத்து எந்த பயனும் இல்லை, ரவி இந்த ஆய்விற்கு உன்னை ஈடுபடுத்தும் முன்பு உன்னுடைய இப்பிறவி நினைவுகளை தவிர்த்தால் மட்டுமே கடந்த கால மரபணு நினைவுகளை எங்களால் பதிவு செய்ய முடியும், அதனால் மூளையின் அரிதாக பயண்படுத்தப்படும் பகுதிகளுக்கு உன்னுடைய இப்பிறவி நினைவுகள் சேமிக்கப்பட்டுள்ளது, அந்த நினைவுகளை பற்றி பிறர் பேசும்போது அது ஏற்றுக்கொள்ளப்படுகிறது. அதனால்தான் உன்னை ரவி என்று கூப்பிடும்போது நீயும் ஆமோதித்தாய். ஆய்வகத்தில் இருக்கும்போதும் உன்னுடம் சரியாக பேசாமல் இருக்க காரணம் உனக்கும் எனக்கும் உள்ள உறவு”

திவ்யா ரவியிடம்  நிழற்படத்தை காண்பிக்க அதில் இருவரும் ஜோடியாக சிரித்துக்கொண்டிருந்தனர்.


தொடரும்.. tbc..

பி.கு, இவையாவும் கற்பனையே..

Saturday 15 October 2011

"எ"ஆம் அறிவு: அத்தியாயம் 6: குழப்பம்.


"எ"ஆம் அறிவு:



இதுவரை
மரபணுக்கள் மூலம் கடந்தகால நினைவுகளை சேகரிக்கும் பொறியை கண்டுபிடிக்கும் விஞ்ஞானி ராமானுஜம், அதை சோழர்களின் வாரிசான ரவி மூலம் சோதித்து, அவனுடைய கடந்த கால நினைவுகள் மட்டுமில்லாமல் அவனுடைய முன்னோர்களின் நினைவுகளையும்  சேகரிக்க முடியும், அதன் மூலம் எண்ணற்ற பயங்களை அடைய முடியும் என  ரவியை நம்பவைக்கிறார். ராமானுஜம் பற்றிய உண்மையை கடந்த கால நினைவுகள் மூலம் அறியும் ரவி, அதைப்பற்றி ராமானுஜத்துடன் விவாதிக்க முடிவு செய்தான்.

இனி..

மேஜையிலிருந்த ரவியை எழுப்பிய ராமானுஜம்,  “நேரம் வந்துவிட்டது, எழுங்கள், இன்று இரவு முழுவதும் உங்களுக்கு ஓய்வு தேவை, நாளையுடன் நம் ஆய்விற்கு தேவையான அனைத்து விஷயங்களும் கிடைத்துவிடும்”

மூளையின் அதீத உழைப்பால் மிகுந்த அசதியில் இருந்த ரவி மேஜையில் இருந்து எழுந்து அப்படியே ஓய்வறைக்கு சென்றான். இரவு முழுவதும் தான் மரபணு நினைவில் கண்டதை எண்ணி, நாளை எப்படியும் இந்த ராமானுஜத்தை பற்றியும் அவருடைய ஆராய்ச்சியின் உண்மை நோக்கத்தையும் அவரிடமே கேட்டு தெரிந்துகொள்ள வேண்டும் என முடிவு செய்தான்.

அடுத்த நாள் காலை,

ரவி, இன்னும் ஓய்வெடுத்துக்கொண்டிருக்கிறீர்களா? காலம் இனி பொன் போன்றது.

“ம்.. சரி, எப்படியும் என்னை நீங்கள் விடப்போவதில்லை, என் கேள்விகளுக்காவது பதில் சொல்லுங்களேன். இங்கு என்னதான் நடந்ததுக்கொண்டிருக்கிறது”

“நான் என்ன முட்டாளா, உங்களுக்கு என்னென்ன விஷயங்கள் தெரியும் என்பதை நான் அறிவேன்.”

“நீங்கள் எதை பற்றி  சொல்கிறீர்கள்  என்று தெரியவில்லையே,?” மழுப்பினான் ரவி.

ராமானுஜம் சிரித்துக்கொண்டே “அமாம், உங்களுக்கு எப்படி தெரியும்”

“சரி உங்களிடம் வேறொன்று  கேட்க வேண்டும்”

“ம்.. கேளுங்கள் ”

“சில விஷயங்களை பார்க்கும் பொழுது வித்தியாசமாக இருக்கிறது, உண்மையாக இல்லை, வரலாறு தவறாக இருக்கிறது. எதிலும் பொறுத்தம் இல்லையே.”

ராமானுஜம் இடமறித்து “பொறுத்தமா? எதனுடன், உங்கள் ஆசிரியர் கற்றுக்கொடுத்ததுடனா, வரலாறு புத்தகத்திலா இல்லை விக்கிபீடியாவில் பார்த்ததா”

“புத்தகங்கள், வரலாற்றுப்பதிவுகள், ஆவணங்கள் என அனைத்தையும் ஒப்பிடும் போது நான் பார்த்த விஷயங்கள் பெரிதும் வேறுபட்டிருக்கிறதே” என்றான் ரவி.

 “ரவி, ஒன்றை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும், இவ்வுலகில் யார் வேண்டுமானாலும் புத்தகத்தை எழுதலாம், எதைபற்றியும் எழுதலாம், இன்று வரலாற்றை பற்றி அறிய நாம் உபயோகிக்கும் புத்தகங்கள், கல்சுவடுகள், ஓலைச்சுவடிகள் என ஏறத்தாழ  அனைத்தும் உலகம் தட்டையானது என்று நம்பியவர்கள் எழுதியது, ஏன், உலகம் ஏழு நாட்களில் படைக்கப்பட்டது என்று ஒரு புத்தகம் சொல்கிறதே, இன்னும் உலகத்தில் அதிகம் விற்பனையாகும் புத்தகம் அது, ”

“சரி, இப்போது என்ன சொல்ல வருகுறீர்கள்.”

“உண்மையான வரலாறு என்று ஒன்றும் இல்லை, இந்த வேளையில்தான் நான் கண்டுபிடித்த பொறி உதவி செய்கிறது, தவறான புரிதலுக்கு வாய்ப்பே இல்லை”

“தவறில்லாமல் எதுவுமே இல்லை”


“என்ன ரவி பேச்சில் நிறைய வித்தியாசம் தெரிகிறது, அது சரி, நீங்கள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லிவிட்டேன், நாம் ஆய்வகத்திற்கு இப்போதாவது செல்லலாமா?”

“உண்மையிலேயே இவர் கடந்த காலத்தில் இருந்து வந்தவர்தானா, அப்படி இருந்தால் தன் நினைவில் பார்த்த குரு சொன்னது போல் இவர் சார்ந்த கழகம் இந்த உலகத்தை ஆள செய்யும் திட்டத்திற்கு நாம் துனைப்போகிறோமா, அப்படி இவர் தீயவராக இருந்தால் இந்நேரம் நடந்த விஷயங்களை தெரிந்துக்கொண்டிருப்பாரே, என்னை ஏன் இன்னும் உயிரோடு விட்டு வைத்திருக்கிறார், கால இயந்திரத்தை பற்றி சென்றமுறை கேட்டது உண்மையா, இல்லை அதுவும் தன்னை திசை திருப்ப செய்த சதியா” என மனதுக்குள் நினைத்தவாரே ராமானுஜத்தை பின் தொடர்ந்து சென்றான் ரவி.

“என்ன ரவி மிகுந்த குழப்பத்தில் இருப்பது போல் தெரிகிறதே, என்னிடம் இன்னும் நிறைய கேள்விகள் கேட்க வேண்டும் என்று உங்கள் முகம் சொல்கிறதே. நீங்கள் கேட்பதற்கு முன் நானே சொல்கிறேன், நீங்கள் நினைத்துக்கொண்டிருப்பது அனைத்தும் உண்மையே, கழகத்தின் கட்டுப்பாட்டில் இந்த உலகத்தை கொண்டுவரச்செய்யும் முயற்சியில்தான் நான் ஈடுபட்டுள்ளேன். ஆனால்..”

“என்ன ஆனால்”

“டுமீல்..”


துப்பாக்கி வெடித்த திசையில் ஒரு உருவம் அவ்விருவர்களை நோக்கி வந்துக்கொண்டிருந்தது.



தொடரும்.. tbc..

பி.கு.  இவையாவும் கற்பனையே.

Wednesday 12 October 2011

"எ"ஆம் அறிவு: அத்தியாயம் 5: பிரளயம்



குருவின் ஆணைப்படி அனைத்து செயலகளிலும் ஈடுபட்டான் அருண்மொழிவர்மன், தன் உடன்பிறந்தவர்கள், படைத்தலைவர்கள், அடுத்த தலைமுறை வாரிசுகள் என அனைவரையும் களைப்பறித்தான், அவன் நம்பிக்கைக்கு பாத்திரமானவர்களை தேர்ந்தெடுத்து அனைத்து முக்கிய துறைகளிலும் அமர்த்தினான். ராஜ்ஜியத்தில் இவ்வளவு நடந்தும் உத்தமன் ஒரு பொம்மை அரசனைப்போல் எதையும் கண்டுகொள்ளாமல் ஆட்சிபுரிந்துக்கொண்டிருந்தான்.



குருவை காண சென்றுக்கொண்டிருந்தான் அருண்மொழிவர்மன், குதிரையை செலுத்திக்கொண்டிருந்த பொழுது திடீரென விழுந்த மரக்கிளையில் சிக்கி தூக்கி எறியப்பட்டான், தலையில் அடிப்பட்டதால் வழி ஓரத்தில் அப்படியே மயங்கி விழுந்தவன் சிறிது நேரத்திற்கு பின் மயக்கம் தெளிந்து அருகிலிருந்த ஓடையில் முகம் கழுவி சிறிது நீரை பருகினான்.

அவ்வழியாக புலிச்சின்னம் பொறித்த பல்லக்குடன் சென்ற வீரர்களை கவனித்தான், அவர்களை இடமறித்து,”இங்கு எங்கே செல்கிறீர்கள், பல்லக்கில் இருப்பது யார்” என வினவினான்.

திகைத்து நின்ற வீரர்களை ஒதுக்கிவிட்டு பல்லக்கின் திரையை விலக்கினான். சிறிது காலத்திற்கு முன்பு அவன் கொலை செய்த தெற்கு சோழ மண்டலத்தின் படைத்தலைவரின் உடல் இருந்தது.

“நீங்கள் இப்படி அமைதியாக இருந்தால் அனைவரின் தலையும் துண்டிக்கப்படும், ம்.. சொல்லுங்கள்” என மிரட்டினான்.

“மன்னித்துவிடுங்கள் இளவரசரே, காட்டில் இருக்கும் ஒரு முனிவர் எங்களிடம் அவ்வப்பொழுது சில இடங்களை சொல்லி அங்கிருந்த இறந்த உடல்கலிருந்து சில பொருட்களை எடுத்துவர சொல்வார், சில நேரம் வெறும் ரத்த மாதிரியையும், சில நேரம் வெறும் மயிரையும் எடுத்துவர சொல்வார், அதற்கு நல்ல சன்மானமும் கொடுப்பார்.” என பயந்தபடி கூறினர்.

அவர்கள் கூறிய அடையாளத்தின் படி இவர்களை வேலை வாங்கியது தன் குருதான் என்பதை தெரிந்து கொண்டான். அந்த நிகழ்விற்கு பிறகு சற்று குழப்பத்துடன் காணப்பட்ட அருண்மொழிவர்மன், தன்னை சுற்றி  நடக்கும் விஷயங்கள் சற்று யோசித்தால் சிறிதும் புலப்படவில்லை என்பதை அறிந்தான். தன்னை ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கும் அந்த குருவை பற்றி யோசித்து பார்க்கையில் இன்னும் குழம்பினான், எப்பொழுதிலிருந்து இவருடன் பழக்கம் ஏற்பட்டது,  இவர் யார்? அவருடைய அடிமைபோல் செயல்பட என்ன காரணம், , ஒருவேளை இவர் எதிரி நாட்டு மந்திரவாதியா, தன்னை வசியப்படுத்தி இந்த சோழ சாம்ராஜ்ஜியத்தையே அழிக்கப்பார்கிறவரா, போன்ற பல கேள்விகள் எழுந்தன, இன்று அதற்கு ஒரு முடிவை எடுத்துவிட வேண்டும் என்ற குறிக்கோளுடன் குதிரையை வேகமாக செலுத்தினான்.


“வா அருண்மொழிவர்மா, நமது திட்டம் எவ்வாறு சென்றுக்கொண்டிருக்கிறது”

“நீங்கள் சொன்னபடி அனைத்தும் செய்துகொண்டிருக்கிறேன்.” என கூறிய அருண்மொழிவர்மனை பார்த்து,

“என்னிடம் ஏதோ கேட்க வேண்டும் என நினைப்பது போல் இருக்கிறதே? உன் மனதில் இருப்பதை சொல்”

“ஒவ்வொரு முறை நீங்கள் சொல்லும் ஆட்களை நான் கொலை செய்த பின் அவர்களுடைய பிரேதத்தை எடுக்க தனியாக ஆட்களை அனுப்புகுறீர்கள், உங்களை குருவாக நான் எப்போது தேர்ந்தெடுத்தேன், என் நினைவில் உள்ளவரை நீங்கள் யார் என்ற விஷயத்தை என்னிடம் சொன்னது கிடையாது, உங்களை பற்றிய நினைவுகள் என் மனதில் துளிகூட இல்லை, உங்கள் கட்டளைப்படி அடங்கும் நாய் போல என்னை மாற்றிவிட்டீர்கள், நீங்கள் யார்?”

“என்னை கேள்வி கேட்கும் அள்விற்கு வளர்ந்துவிட்டாயா?”

“உங்களை கேள்வி கேட்கவில்லை, இது என் கட்டளை, பதில் சொல்லுங்கள், நீங்கள் யார், நான் இவ்வளவு கொலை செய்ததற்க்கு உண்மையான காரணம் என்ன, இறந்தவர்கள் அனைவருக்கும் உள்ள ஒற்றுமை என்ன, இனிமேல் என்னை ஏமாற்ற முடியாது.”

“அனைத்தும் சொல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது, ஆம் நீ கொலை செய்த அனைவரும் ஒரு கழகத்தை சேர்ந்தவர்கள், இந்த உலகத்தை தங்களுக்கு கீழ் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டவர்கள், அவர்களிடம் அதற்கான பொறி உள்ளது. கால ஓட்டத்தில் முன் சென்று அங்கிருக்கும் நவீன ஆயுதங்களை கைப்பற்றி அதன் மூலம் இவ்வுலகை அடிமைப்படுத்த நினைக்கிறார்கள். இப்பொழுது உன்னுடைய எதிர்கால தலைமுறையினரைக் கண்டுபிடித்து அவர்களின் மரபணு நினைவுகள் மூலம் நம்முடைய திட்டத்தை கண்டறிந்து நம்மை அழிக்க நினைக்கின்றனர்.”

“நீங்கள் சொல்வது அனைத்தும் புதிராக இருக்கிறது, அப்படியே அவர்களிடம் காலத்தை கடக்கும் பொறி இருந்தாலும் அது எப்படி உங்களுக்கு தெரியும், இல்லை இவைஅனைத்தும் என்னை ஏமாற்ற நீங்கள் சொல்லும் கதையாகவும் இருக்கலாம், எதுவும் நம்பும்படியில்லை.”

“யாராக இருந்தாலும் சந்தேகம் வரும், அந்த பொறியைக் கண்டுபிடித்தவன் என்ற முறையில் அதனால் ஏற்படும் ஆக்கத்தையும், அழிவையும் நேரில் பார்த்தவன் நான்”

“என்ன! நீங்கள் கண்டுபிடித்ததா?” ஆச்சரியத்துடன் கேட்டான் அருண்மொழிவர்மன்.

“ஆம் என் கண்டுப்பிடிப்பை திருடிக்கொண்டு அதன் மூலம் இவ்வுலகை தனக்கு அடிமையாக்க நினைக்கிறான் என் பழைய உதவியாளன்.”

“அவன் யார், அவனின் இந்த தீய செயலை நிறுத்த வேண்டும், அவனைப்பற்றி முததில் சொல்லியிருந்தால் என் வாளுக்கு இரையாக்கிருப்பேனே..”

“அவன் தீயவனாக இருந்தாலும் புத்திசாலி, நீ அவனை கண்டுபிடிக்க முடியாத இடத்தில் இருக்கிறான்.”

“அந்த கவலை உங்களுக்கு வேண்டாம், அவன் பெயரை மட்டும் சொல்லுங்கள், இவ்வுலகில் எங்கிருந்தாலும் அவனைக்கண்டுபிடித்து உங்களிடம் ஒப்படைக்கிறேன்.”

“அவன் பெயர் ராமானுஜம், அவன் இருப்பது இதே இடத்தில்தான் ஆனால்…”


”என்ன தயக்கம், சொல்லுங்கள்”

“எதிர்காலத்தில்”


தொடரும்.. tbc..


Sunday 9 October 2011

"எ"ஆம் அறிவு: அத்தியாயம் 4: தொடக்கம்

"எ"ஆம் அறிவு: அத்தியாயம் 1 , அத்தியாயம் 2 & அத்தியாயம் 3

குருவின் ஆனைப்படி தனது முதல் இலக்கான தன் உடன்பிறந்த சகோதரனான அதித்ய கரிகாலனை பாண்டியர்கள் உடனான செவ்வூர் போரில் எதிரிகள் வேடமிட்டு தந்திரமாக கொலை செய்தான். போரில் பாண்டிய ஒற்றர்களால் கொலைசெய்யப்பட்டான் என்ற செய்தி ஊர் முழுக்க பரவியது.

குருவின் ரகசிய இருப்பிடத்தில் சந்தித்தான் அருண்மொழிவர்மன்.

“வணக்கம் குருவே”

“வருக வீரனே, குருவின் பெறுமையை நீ காப்பாற்றிவிட்டாய், நீ ஒரு செயல்வீரன் என்பதை நிருபித்துவிட்டாய், என் எதிர்ப்பார்ப்பை பூர்த்திசெய்துவிட்டாய், அதித்ய கரிகாலலின் இழப்பு சோழ சாம்ராஜ்ஜியத்தில் பலத்த சலனத்தை உருவாக்கும், , உன் மாமா உத்தமன் அரியணையில் அமர்வதற்கு தயாராக இருக்கிறான், இப்போது அவன் அரசனாக பதவி ஏற்கட்டும், எப்படியும் அதித்ய கரிகாலனின் கொலை மீதான சந்தேகம் மக்கள் மனதில் இருக்கும், அது அடுத்து அரியணையேரும் அரசனின் செயல்தான் என்று பெறும்பாலோர் நம்புவர், அரியணையில் ஏறுவது நம் முதல் நோக்கமல்ல, மக்கள் மனதில் இடம்பிடிப்பதே நம் முதல் நோக்கமாகும்..”

“சரி குருவே, அவன் ராஜ்ஜியத்திற்கு பின் உத்தமன் அவன் மகனுக்கு முடிசூட்டிவிட்டால் நாம் என்ன செய்வது.”

“அப்போதுதான் மக்கள் உன் பக்கம் இருப்பதை நீ சாதகமாக்கிக்கொள்ள வேண்டும், நீ உத்தமனை சந்தித்து, அவன் ஆட்சியில் பொறுப்பேர்க்க உனக்கு எந்த பிரச்சனையில்லை, ஆனால் அவனுக்குபின் உன்னைதான் அரசனாகமுடிசூட வேண்டும் என்று ஒப்பந்தத்தில் உத்தமனின் முத்திரையை வாங்கிவிடு. அரசனாகும் ஆசையில் அவனும் இந்த ஒப்பந்தத்தில் உடன்படுவான்.”

“சரி குருவே, நான் உடனே சோழ தலைநகரத்திற்கு புறப்படுகிறேன்.”

“வெற்றி உனக்கே.”  என வாழ்த்தி அனுப்பினார்.




ரவி, ரவி, என பொறியில் படுத்திருந்த ரவியை எழுப்பினார் ராமானுஜம்.

“இப்போது என்ன நடந்தது, ஏன் எழுப்பினீர்கள்.”

“உங்களுக்கு கட்டாயம் ஓய்வு தேவை, ஓய்வறைக்கு செல்லுங்கள்.” என்று கூறி ஆய்வகத்தை விட்டு கிளம்பினார்.”

ஆய்வகத்தில் இருந்த திவ்யாவிடமிருந்து தனக்கு சாதகமாக ஏதாவது பதில் கிடைக்கும் என்ற எதிர்ப்பார்ப்புடன் அவளிடம் பேசினான் ரவி.”

“இங்க என்ன நடக்குதுனு நீங்களாவது சொல்லுங்க”

“மன்னிச்சிடுங்க ரவி, உங்ககிட்ட எதுவும் பேச கூடாதுனு எங்க பாஸ் உத்தரவுபோட்டிருக்கார்.”

“என் நிலமையில் இருந்து கொஞ்சம் பாருங்க, நான் எங்க இருக்கேனு தெரியல, நீங்கயெல்லாம் விஞ்ஞானியா இல்ல தீவிரவாதிங்களா, என்ன ஏன் இங்க கொண்டுவந்தீங்க, இல்ல, கடத்திக்கிட்டு வந்தீங்களானு ஒன்னுமே புரியில, பிளீஸ்  ஏதாவது சொல்லுங்க.”

“உங்களுக்கு இதுவரை தெரிந்ததே போதுமானது மற்றும் பாதுகாப்பானது.”

“பாதுகாப்பா, யாருக்கு? உங்களுக்கா இல்லை எனக்கா”


அமைதியாய் இருந்த திவ்யாவை பார்த்து, இனிமேல் இவளிடம் பேசுவதற்கு எதுவும் இல்லை, நேரடியாக ராமானுஜத்திடமே பேச வேண்டியதுதான் என்று நினைத்துக்கொண்டு கிளம்பினான்.

ஓய்வறையில் இருந்த ரவி ராமானுஜத்தின் வருகைக்காக  காத்திருந்தான்.

அடுத்த நாள் காலை,

“வாங்க ரவி, ஆய்வகத்திற்கு செல்லலாம், இனி காலம் பொன் போன்றது.” உறங்கிக்கொண்டிருந்த ரவியை எழுப்பினார் ராமானுஜம். ரவியும் பின்தொடர்ந்து சென்றான்.

“திவ்யா வரும்வரை காத்திருப்போம், ஆமாம் ரவி என்னுடன் பேச வேண்டும் என்று கூறினீர்களா?”

“ம். இந்த ஆய்வில் மூலம் நீங்கள் என்ன சாதிக்க விரும்புகிறீர்கள்? முன்பு நீங்கள் சொன்னது போல் எதுவும் நடக்கவில்லையே”

“வரலாறு இப்பொழுது நம் கையில், வெறும் பார்வையாளனாக இருந்த நீ,  செயலில் இறங்கும் நேரம் வெகுதூரமில்லை என்று சொல்லியது நினைவில் இருக்கிறதா? இப்போது இவ்வுலகில் என்ன நடக்கிறது என்று தெரிகிறதா”

“ம், நினைவில் இருக்கிறது, அதற்கும் இப்போது நடைபெறுவதற்கும் என்ன சம்பந்தம்”

“இவ்வுலகம் குழப்பங்களின் உச்சத்தில் இருக்கிறது, ஆயிரம் வருடங்களுக்கு முன்பு உன் மூதாதயர்கள் துவங்கி இன்று வரை இந்த சமூகம் அதே குழப்பத்தில் இருக்கிறது, பதவியாசை, காட்டுமிராண்டித்தனம் என அனைத்தும் ஒன்று கூடி இந்த உலகத்தை அழித்துக்கொண்டிருக்கிறது.”


“ சரி, இப்பொழுது என்ன சொல்ல வருகுறீர்கள், உங்கள் நிலை என்ன?”

“ஒழுக்கம் ரவி, உலகத்தில் ஒழுக்கம் தேவைபடுகிறது, அதை நோக்கித்தான் நாம் வேலை செய்ய  செய்துகொண்டிருக்கிறோம், இந்த உலகத்திற்கு ஒழுக்கத்தை புகட்டப்போகிறோம்.”

“ம்.. ஒரு சிறந்த எதிர்காலத்தை நாம் உறுவாக்குகிறோம் என்று சொல்வது நம்பும்படியில்லை”

“உங்கள் நம்பிக்கை எனக்கு முக்கியமில்லை, ஆனால் நீங்கள் கேட்ட கேள்விக்கு  அதுதான் சரியான பதில், மனித இனம் ஒரு சரியான திசையை தேடுகிறது, இங்கு எதற்காக வந்திருக்கிறோம், எதை செய்ய வேண்டும் போன்ற கேள்விகளுக்கு சரியான பதிலை நாம் தரப்போகிறோம். எப்படி வாழப்போகிறோம் என்ற பதில் தெரிந்தவுடன் அவர்களின் எதிர்காலம் சிறந்து விளங்கும்”

“அது எப்படி நடக்கும்”

“உலகில் உள்ள அனைத்து மோதல்களையும் முடிவுக்கு கொண்டு வர வேண்டும், உலக அமைதியை நிலைநாட்ட வேண்டும், அதுதானே உன் கனவு, அருண்மொழிவர்மா”

“நான் அவன் இல்லை, இன்னும் இங்கு நான் என்ன செய்துகொண்டிருக்கிறேன் என்று புரியவில்லை”



“காலம் உங்களுக்கு புரிய வைக்கும், உங்களுக்கு புரியவில்லை என்றாலும் பரவாயில்லை, அது எங்கே இருக்கிறது என்றும் சொல்லும் வரை எந்த பிரச்சனையும் இல்லை.”

“எது எங்கே இருக்கிறது, எனக்கு ஒன்றும் புரியவில்லை”

"கால இயந்திரம்"

Friday 7 October 2011

வாழ்க்க ஒரு வட்டம்டா: ‘சவால் சிறுகதை-2011’


“விஷ்னு நாம் திட்டம் போட்ட மாதிரி எல்லாம் நடந்துகிட்டு இருக்கு. எஸ்.பி. கோகுல் நம்ம வலையில விழற நேரம் நெருங்கிடுச்சு, நான் சொன்ன மாதிரி குறியீட  கடைசிநேரத்துல அனுப்பிடு”

“சார் இதுனால எனக்கு எந்த பிரச்சனை வராம பார்த்துக்கோங்க, எஸ்.பி ரொம்ப பொல்லாதவன். இந்த விஷயத்துல என் தலையீடு இருக்குனு தெரிஞ்சுதுனா கண்டிப்பா என்ன சும்மா விடமாட்டான்.”

“கோகுல நான் பார்த்துக்குறேன், அவன் நம்மளுக்கு செஞ்ச துரோகத்த மறந்துடாத, அவன் அணுஅணுவா கஷ்டப்படனும், நாம பட்ட வேதனையும் வலியையும் அவனுக்கு புரியனும். இப்ப கிளம்பு நாம நாளைக்கு பார்க்கலாம்.”




ரவி அவசரமாக சிலவற்றை பையில் திணித்துக்கொண்டிருந்தான், நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு புத்துணர்ச்சி,  தன்னுடன் கல்லூரியில் படித்த கார்த்திக்,சதீஷ்,தாமு மற்றும் கோகுலுடன் ஒரு பயணம், கோகுலின் ஆபிஸ் ஃபிரண்டு விஷ்னுவும் வருவதாக சொல்லியிருந்தான். ஹார்ன் சத்தம் கேட்டதும் வந்திருப்பது கோகுல் என்பதை அறிந்துக்கொண்டு வீட்டைப்பூட்டி சாவியை ஜன்னலில் வைத்து கீழே இறங்கி வந்தான்.

ஏண்டா வரோம்னு தெரியும்ல, ரெடியா இருக்க வேண்டியதுதான? என்ற கோகுலிடம் “ ஃப்ரீயாவிடு மச்சி இன்னும் டைம் நிறைய இருக்கு” பதிலளித்தான் ரவி.

“இல்லடா, இப்ப அப்படியே விஷ்னு வீட்டுக்கு போய் அவன பிக்கப்பண்ணனும், அவன்கிட்டதான் குறியீடு இருக்கு, ட்ராபிக் வேற அதிகமா இருக்கு”


"அதான் வந்துட்டேன்ல, சரி மச்சி எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம்," கார் ஓட்டிக்கொண்டிருக்கும் கோகுலை பார்த்து கேட்டான் ரவி, “சொல்றா”

“நீ எப்படிடா எஸ்.பி ஆன, இல்ல,  காலேஜ்வரைக்கும் பி. கோகுல்தானே?”

“எங்க அப்பா பேர் பிரகாசம், தாத்தா பேரு சுப்பிரமணியம், அதான் இனிஷியலா எஸ்.பினு மாத்திட்டேன், ஆபிஸ்ல மூனு கோகுல், ரெண்டு பேருக்கும்  இனிஷியல் ‘பி’  அதனாலதான், பேரும் கெத்தா இருந்துதா… ஆமாஅதுக்கென்ன இப்ப”

“அப்ப தமிழ்ல உன் பேர் சு.பின்றது தெரியுமா,” மொக்கையாக இருந்தாலும் அனைவரும் சிரித்தனர்.

“மொக்கைய போடாத, இருக்குற ட்ராபிக்ல எப்ப போய் சேருவோம்னு தெரியல, ஒழுங்கா பாட்டு கேளு” ஒலியை கூட்டினான்.

“நான் பாடும் மௌனராகம் கேட்கவில்லையா – ஸ்பீக்கரில் ஒலித்துக்கொண்டிருந்தது.”

“என்னைய நிறுத்த சொல்லிட்டு நீ ஆரம்பிச்சுட்ட, வேணாம்டா, அழுதுடுவேன், மரியாதையா பாட்ட மாத்து”

“இதுக்குதான் ஒழுங்கா ட்ரேன்ல போலாம்னு சொன்னேன், ட்ராபிக் இல்லாம ஃப்ரீயா போயிருக்கலாம் யாராவது கேட்டீங்களா” சதீஷ் கூறினான்.

“மச்சி ட்ரேன்ல போனா பயணம், அதுவே கார் இல்ல பைக்ல போனா அனுபவம், வழியில எங்க வேணாலும் நிறுத்தி இயற்கைய ரசிச்சுக்குட்டே போகலாம்” எனக்கூறிய தாமுவை பார்த்து கார்த்திக் “என்னடா ஆச்சு இவனுக்கு, நாம போறது இடத்துக்கும் இவன் பேசறதுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கா, சரக்கடிச்சுட்டு மட்டையானா பரவாயில்ல, வழியில கூவத்த தவிர எதுவும் இல்ல, இவன் என்னடான்னா”

இன்னோவா கார் ஒரு வீட்டின் முன்பு நின்றது, இரண்டுமுறை ஹார்ன் சத்தம் எழுப்பியதும் கீழே  இறங்கி வந்தான் விஷ்னு.

“என்னடா இன்னும் ரெடி ஆகல”

“இல்லடா மச்சி ஆபிஸ் வேல இருக்கு, நீங்க போங்க”

“டேய் இப்ப சொன்னா எப்படி? பாஸ்கிட்ட நான் பேசிக்கிறேன், நீ கிளம்பு”  என்றான் கோகுல்.

“நம்ம டெக்லீட பத்தி தெரிஞ்சும் ஏண்டா புரியாத மாதிரி பேசற..சாரி பாஸ் தப்பா நினைச்சுகாதீங்க  இப்ப என்னால வரமுடியாது, நாம் இன்னொரு நாள் சந்திக்கலாம். இந்தாங்க குறியீடு” என ஒரு துண்டு சீட்டை கொடுத்துவிட்டு அனைவரிடமும் விடைபெற்று சென்றான்.

கார் முழு வேகத்தில்  பறந்து கொண்டு சென்றது.

“மச்சி உன் ஃப்ரெண்டு கஞ்சன்னு சொல்லிருக்க, அதுக்குனு இப்படியா, ஒரு எ4 ஷீட நாப்பதா கட் பண்ணி பிரிண்டவுட் எடுத்திருக்கான். சரி அததான் ஒழுங்கா செஞ்சானா, குடுத்தது அவன், வாங்கினது நான், என்னவோ ஸ்கூல லீவ் லெட்டர் எழுதுற மாதிரி  என்னடா இது,” என்று சீட்டை கோகுலிடம் நீட்டினான்.

“நமக்கு தேவ அந்த குறியீடு, அது இருக்குல அப்பறம் என்ன கவலை”

அவர்கள் சேரும் இடம் வந்தது, திருவிழா போல கூட்டம் கூடி இருந்தது. அன்று தல நடிக்கும் 50வது படம் ரிலீஸ்,  “சரி மச்சி கவுண்டர்ல போய் இந்த குறியீட காட்டு, டிக்கெட் கொடுப்பாங்க “.

சிறிது நேரத்தில் வியர்வையுடன் கோபம் கொப்பளிக்க வந்த ரவி கோகுலிடம்
“மச்சி அந்த ******* நம்மள ஏமாத்திட்டாண்டா.”

“என்னடா சொல்ற”

“அது தப்பான குறியீடு டா,  இப்ப ஒரு டிக்கெட்டும் இல்ல, ஹவுஸ்புல் டா, என்னடா பண்றது, அவன் மட்டும் என் கையில கிடச்சான் செத்தான்டா.”

அடுத்த நாள் கோகுலின் ஆபிஸ்.

கோபத்துடன் விஷ்னுவின் காபின் நோக்கி சென்ற கோகுல் அந்த துண்டு சீட்டை விஷ்னுவின் டேபில் மீது வீசினான், அப்போது சுழலும் நாற்காலியிலிருந்து திரும்பிய உருவத்தை பார்த்து திடுக்கிட்டான்.

வாங்க எஸ்.பி என்று வரவேற்றான் குரு, கோகுலுடைய  டெக் லீட், மேஜையிலிருந்த இன்னொரு துண்டுச்சீட்டில் “ எஸ்.பி கோகுலிடம் நான் தவறான குறியீடுதான் கொடுத்திருக்கிறேன். கவலை வேண்டாம் – விஷ்னு.” பார்த்ததும் கோகுலுக்கு அனைத்தும் புரிந்தது.

மூன்று வாரங்களுக்கு முன்பு, தளபதியின் படம், முதல் ஷோ டிக்கெட் வைத்திருந்த  குருவின் வண்டியை பஞ்சர் செய்து, அதை சரி செய்ய பார்கிங் ஏரியாவிற்கு சென்றபோது கிடைத்த நேரத்தில் ஷோ டிக்கெட்டை கிழித்த ஞாபகம் கோகுலுக்கு வந்தது.

அப்போது  குருவின் கைப்பேசி சினுங்கியது, அதில் "informer vishnu" எனத்தெரிய "வாழ்க்க ஒரு வட்டம்டா" தளபதியின் குரல் ரிங்டோனாய் ஒலித்துக்கொண்டிருந்தது.

ஹா.. ஹா.. ஹா..எதிர்முனையில் சிரித்துக்கொண்டிருந்தான் குரு.


Tuesday 4 October 2011

"எ"ஆம் அறிவு: அத்தியாயம் 3: இரத்த அரியணை




அடுத்த நாள் காலை


நீண்ட உறக்கத்திற்கு பிறகு எழுந்த ரவி, தன்னை பார்த்துக்கொண்டிருந்த ராமானுஜத்தை பார்த்து திடுக்கிட்டான். “என்ன சார், தூங்கிட்டுயிருக்கும் பொழுதும் என்ன கவனிக்குனுமா?” “இனி எப்பொழுதும் உன்னை கவனித்துக்கொண்டே இருக்க வேண்டும்” என பதிலளித்தார்.

நீங்க சொல்ற மாதிரி மரபணு நினைவுகள் செயல்பட்டா நாம சோழர்களுடைய அனைத்து ரகசியங்களையும் பெறலாம் என்றிருக்க, ஏன் ராஜ ராஜனுடைய பகுதியை மட்டும் கவனம் செலுத்துறீங்க.

சோழர்களுடைய வரலாறு முழுவதும் சொல்ல நேரமில்லை, சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் ராஜ ராஜ சோழன் (எ) அருண்மொழிவர்மன் ஆட்சியில் அமர்ந்த சரியான வரலாறு எங்கும் இல்லை, பரந்தக சோழனின் இறப்பிற்க்கு பிறகு முப்பது ஆண்டுகள் சோழர்களின் வரலாறு ஒரு மாயையாகவே இன்றும் இருக்கிறது, இந்த முப்பது ஆண்டுகளில்  ஐந்து மன்னர்கள்  சோழமன்னை ஆண்டுள்ளனர். இந்த இடைப்பட்ட காலத்தில் அருண்மொழிவர்மன்  எங்கிருந்தான், என்ன செய்துகொண்டிருந்தான், சோழர் ஆட்சியில் அவன் பங்கென்ன என பல கேள்விகள் எழுகின்றன.  ஐந்து மன்னர்களும் இயற்க்கைக்கு அப்பார்ப்பட்ட முறையிலேயே இறந்துள்ளனர், மன்னர்கள் மட்டும் இல்லாமல், அரசனாக தகுதி உள்ள அனைவரும் மர்மமானமுறையில் இறந்துள்ளனர், அருண்மொழிவர்மனை ஆட்சியில் அமர்வதற்க்காகவே அனைத்தும் நடந்ததுபோல் உள்ளது. இது வெறும் பதவியாசையாக இருப்பின் நடந்த விஷயங்கள் கண்டிப்பாக வரலாற்றில் இடம்பெற்றிருக்கும், ஆனால் எதுவும் இன்னால் வரை கிடைக்கவில்லை. கடைசியாக கிடைத்த தகவல்படி, அருண்மொழிவர்மன் தனியாக எதையும் செய்யவில்லை, அவனுக்கு உறுதுணையாக ஒருவர் இருந்துள்ளார். அவர் யார் என்பதை கண்டுபிடிப்பதே நமது முதல் குறிக்கோள். என சொல்லி முடித்தார் ராமானுஜம்.

“அவரை கண்டுபிடிப்பதால் நமக்கென்ன பயன்.”

“இன்னும் கொஞ்ச நாள் பொறுமையுடன் செய்ல்படுவோம், நம்முடைய வேலையை முதலில் முடிப்போம். இப்பொழுது அதை பற்றி யோசித்தால்  நம் முயற்சிக்கு நாமே குறுக்கிடுவதுபோல் ஆகிவிடும்.”

“வரலாறு இப்பொழுது நம் கையில், வெறும் பார்வையாளனாக இருந்த நீ,  செயலில் இறங்கும் நேரம் வெகுதூரமில்லை,

மரபணு நினைவோட்டத்திற்கு தயாராண ரவி, மேஜையின் மீது படுத்தான், சில நிமிடங்களில் அவனது மூளையின் செயல்பாடு பண்மடங்காக உயர்வதாக கணிப்பொறி காட்டியது. 

  


மேஜையில் படுத்திருந்த ரவியை சரிபார்த்துவிட்டு சென்று கொண்டிருந்த திவ்யாவை அழைத்தார் ராமானுஜம்.

“மிஸ் திவ்யா, எல்லாம் சரியாக இருக்கிறதா”

“சார், இந்த அளவிற்க்கு யாரும் நம் பொறியில் பயணிக்கவில்லை, ரவியின் மூளை செயல்பாடுகள் திருப்திகரமாக உள்ளன, இன்னும் சில மணி நேரத்தில் அவருடைய மூளை மரபணு நினைவுகளின் மையத்தை நெருங்கிவிடும்.  இன்னும் ஒரிரு தினங்களில் நம் வெற்றி உறுதியாகிவிடும்.”

அவசரம் வேண்டாம், மரபணு நினைவுகளை ஒருவன் நெருங்கும் பொழுது அவனின் மூளையின் செயல்பாடு ஐம்பது சதவிகிதத்திற்கு  மேல் இருக்கும், அதுவே சாதாரண நேரத்தில் ஐந்து சதவிகிதத்திற்க்கு குறைவாகவே செயல்படும், இவ்வளவு வேறுபாடுகளை தாங்கிக்கொள்ளும் சக்திக்கு  கண்டிப்பாக  ஓய்வு அவசியம், ஒரு நாளில் ஐந்து நிமிடங்களுக்கு மேல் நாம் இந்த ஆய்வில் ரவியை உட்படுத்தகூடாது.இருந்தாலும், நினைவுலகத்தில் தொலைந்த  மற்றவர்களை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். இவன் தான் நமக்கு கிடைத்திருக்கும் அரிய வாய்ப்பு,  நாம் முன்பு செய்தது போல் தொடர் நினைவ்வோட்டம் இல்லாமல், முறையே ஓய்வுடன் கூடிய நினைவோட்டத்தை பதிவு செய்ய வேண்டும்.”

“அப்படி செய்தால் நீண்ட நாட்கள் ஆகுமே”

“அதுதான் இல்லை, மூளையின் அசாதாரண செயல்பாட்டினால், அந்த ஐந்து நிமிடங்களில் ஒரு வருடத்திற்க்கு மேலான நினைவுகளை பதிவிறக்க முடியும்.  என் முப்பது வருட உழைப்பிற்கு கூடிய விரைவில் பதில் கிடைக்க்ப்போகிறது.”

“வாழ்த்துக்கள் சார்” 


“அருண்மொழிவர்மா, நம் திட்டத்தை அரங்கேற்ற தக்க சமயம் வந்துவிட்டது, நான் அளித்த பயிற்ச்சிகள் உனக்கு உறுதுணையாக இருக்கும், உன்னை ராஜ்ஜியத்தில் அமரவைக்கும் இந்த திட்டம் நிறைவடைய இன்னும் இருபது ஆண்டுகள் உள்ளன,  இந்த இருபது ஆண்டுகளில் நீ அழிக்கப்போகும் உயிர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் உன் ராஜவாழ்க்கை இருக்கும். முதலில் நீ அழிக்கப்போவது உன் உடன்பிறந்தவன்.அவன் இருக்கும் வரை உன்னால் சிம்மாசனத்தில் அமர முடியாது, நீ செய்யப்போவது கொலைகள் அல்ல, உன் மூதாதயர்களின் வழியில், தகுதியற்றவனை ஆட்சியில் அமரவிடுவதை தடுக்க நீ செய்யும் வதம், களைப்பறிப்பு, வெற்றி உனக்கே. சென்று வா ”

“அப்படியே ஆகட்டும் “ எனக்கூறி குருவை வணங்கி விடைபெற்று சென்றான்.


தொடரும்…       tbc..


Sunday 2 October 2011

"எ"ஆம் அறிவு: அத்தியாயம் 2: பொறி

ஆச்சிரியத்தில் இருந்த  ரவியை ராமானுஜம் அவருடைய ஆய்வகத்திற்கு அழைத்து சென்றார்.  சில நிமிட நடைக்கு பிறகு அங்கு வந்தடைந்தார்கள்.  சுவர்கள் முழுவதும் கணிப்பொறித்திரைகள்  சூழ்ந்திருந்தன, நடுவில் ஒரு மேஜை கண்ணாடி மூடியுடன் இருந்தது. அங்கு ஒரு பெண் கையில் தொடுதிரை கணினி மூலம் சில அளவீடுகளை குறித்துக்கொண்டிருந்தாள். “மிஸ். திவ்யா, நாம் இவ்வளவு நாள் தேடிக்கொண்டிருந்தவர் இவர்தான், பெயர் ரவி,  ரவி, இவங்க தான் என்னோட இந்த  ஆய்விற்க்கு மிகவும் உறுதுனையா இருந்தாங்க.” என்றார்.

ரா – ராமானுஜம்
ர – ரவி
தி – திவ்யா

ரா- நாம ரவிக்கு கொடுத்த மருந்து சரியா வேல செஞ்சுதா, குறிப்புகள் என்ன சொல்லுது.

ர – மருந்தா.. என்ன சார் சொல்றீங்க. எனக்கு தெரியாம வேற என்ன கொடுத்தீங்க

ரா – கவலபடாதீங்க ரவி, இது ஒரு சாதாரண மருந்து, நினைவாற்றலை அதிகப்படுத்தும் ஒருவகை ஸ்டெராய்ட். இதனால் ஒரு வித பின்விளைவுகளும் இல்லை.  உங்களுக்கு இந்த விஷயங்களை நிருபிக்காமல்  கூப்பிட்டிருந்தால் கண்டிப்பாக எங்களை பைத்தியம் என்று நினைத்திருப்பீர்கள். சரிதானே நான் சொல்வது. உங்கள் ஒத்துழைப்பு மட்டும் இருந்தால் நாம் அனைவரும் உலகத்திலுள்ள அனைத்தையும் விலைக்கு வாங்க முடியும்.

ர – அப்ப என் வேலை

ரா – அதபத்தி இப்ப ஏன் கவலை பட்றீங்க. உங்க சார்பா மெடிக்கல் லீவ் திவ்யா ஆபிஸுக்கு அனுப்பிட்டாங்க. உங்க ரூம்மேட்ஸ் கிட்டயும் நீங்க வெளியூருக்கு பொயிருக்குறதா சொல்லிட்டோம். நீங்க எத பத்தியும் கவலைப்பட வேண்டாம். நீங்க இப்ப ஓய்வெடுங்க. உங்களுக்கு தூக்கம்தான் இனிமே வேலை. ரவி இப்ப நீங்க இந்த மேஜையின் மேல் படுங்கள், இந்த கண்ணாடித்திரை  உங்களுடைய கனவுகளை பதிவு செய்யும். சென்ற முறை எங்கு உங்களுடைய கனவு நின்றது என்று நினைவிருக்கிறதா?

ர –  கனவா இல்லை நினைவா

ரா – சபாஷ்.  உங்களுடைய தற்போதய நினைவு நீங்கள் கானும் கனவை செயலிழக்கச்செய்கிறது. நீங்கள் காண்பது கனவுதான் என உங்கள் ஆழ்மனது காட்டிக்கொடுக்கிறது, நீங்கள் கனவு என்று சிறிது சந்தேகப்பட்டாலும்  உங்கள் நினைவுகள் மறுபடியும்  பழைய நிலை, அதாவது இப்பொதய காலத்திற்கு வந்துவிடுகிறது. நான் கண்டுபித்திருக்கு இந்த பொறி உங்களுடைய மரபணு நினைவுகளை பதிவுசெய்கிறது. ஒரு வேலை பதிவின்பொழுது தடைப்பட்டால், மீண்டும் விட்ட இடத்தில் இருந்து துவங்க இந்த பொறி உதவும்.


“சாதரண மேஜை போன்ற தோற்றம் இருந்தாலும், அதன் கீழிருந்து எண்ணற்ற வயர்கள் மூலம் தகவல் சர்வர் அறைக்கு சென்றடைந்தது.”

ரா -  திவ்யா, பொறியை தயார் படுத்து, இன்று ரவி காணப்போகும் சரித்திரம் , நம் வாழ்க்கையில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தப்போகிறது.

தி – ரவி, இந்த கண்ணாடிய இந்த மேஜையின் மீது படுக்கும் பொழுது அணிந்துகொள்ளுங்கள், உங்கள் விழித்திரை அசைவுகள் மூலம் தகவல்களை எங்களால் சேகரிக்க  முடியும்.

ரவி கண்ணாடியை அணிந்துகொண்டு மேஜையின் மீது சாய்ந்தான். திவ்யா அவள் கையிலிருந்த தொடுதிரையில் சில எண்களை அழுத்த மேஜையை சுற்றி ஒரு வெளிச்சம் உண்டாகியது. அப்பொறி உண்டாக்கிய மென்அதிர்வுகள் மூலம் ரவி உடனே மயங்கினான்.

தி – சார், ரவிகிட்ட உண்மையா நடந்த விஷயத்தை எப்ப சொல்லப்போறீங்க..

ரா – அதுக்கான சரியான சமயம் வரும், அவசரப்படவேண்டாம். நம்முடைய திட்டம் நிறைவேறும் வரை காத்திருப்போம்… 

“மகனே, சோழ குலத்து வீரப் புகழை இனி உன் உயிர் மூச்சாகவேண்டும். சோழர்களுடைய புகழ் உலகெங்கும் பரவ நீ அயராது உழைக்க வேண்டும். ” 


தன் அப்பா சொல்ல கேட்டுக்கொண்டிருந்தான் அருண்மொழிவர்மன் (எ)  ராஜ ராஜ சோழன்.




தொடரும்..  tbc..