Friday 6 January 2012

வெள்ளியங்கிரி


வெள்ளியங்கிரி மலை தமிழ்நாடு கோயம்புத்தூருக்குகிட்டத்தட்ட 40 கிமீ தொலைவில் உள்ள மலைத் தொடர். தென்கயிலை என பக்தர்களால் அழைக்கப்படும் வெள்ளியங்கிரி மலையானது கொட்டும் பனியும், கை தொட்டு விளையாடும் உயரத்தில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்கிரி மலை ஒரு புனிதத் தலமாகவும், சுற்றுலாத்தலமாகவும் இருந்து வருகிறது. இது மேகங்களும் சூழ, வெள்ளி வார்ப்படத்தால் மூடியது போல தோற்றமளிப்பதால் "வெள்ளியங்கிரி" என்ற பெயர் பெற்றது. இம் மலையடிவாரம் பூண்டி என அழைக்கப்படுகிறது. சுமார் 3500 அடி உயரமுடைய (கடல் மட்டத்திலிருந்து5000 அடி,1524 m) இம்மலை ஏழு சிகரங்களைக் கொண்டுள்ளது. ஐந்தரை கிலோ மீட்டர் தூரம் செல்லும் இப்பாதையில் வெள்ளை விநாயகர் கோயில், பாம்பாட்டி சுனை, கைதட்டி சுனை, சீதைவனம், அர்ச்சுனன் வில், பீமன் களி உருண்டை, ஆண்டி சுனை போன்ற இடங்களை கண்டு மகிழ்ந்து செல்லலாம்.இரவில், மலையில் காட்டு யானைகள் மற்றும் விலங்குகளின் நடமாட்டம் தொடங்கிவிடும் என்பதால் இங்கிருந்து மாலையிலேயே திரும்பி விடுதல் பாதுகாப்பானது..


நன்றி விக்கி தமிழ்


இது என் இரண்டாவது வெள்ளியங்கிரி பயணம், இரயில்வேதுறையில் இருக்கும் ஒருவரின் உதவியுடன் சேரன் எக்ஸ்பிரஸில்  கடைசி நேரத்திலும் டிக்கெட் கிடைத்தது, காலை ஐந்து மணிக்கு கோவை வடக்கு இரயில் நிலையத்தில் இறங்கி  காந்திபுரம் பஸ் ஸ்டாப்பிற்க்கு நடந்து சென்றேன். பூண்டி செல்ல நேரடி பேருந்து கிடைக்காததால் ஈஷா தியான மண்டபத்திற்கு செல்லும் பேருந்தில் ஏறி பூண்டி செல்ல 2கி.மி முன்பு இறங்கினேன். மேகங்கள் சூழ்ந்திருந்ததால் காலை 6.30க்கு ஊட்டி போல் இருந்தது. சில நிமிட சாலையோற நடைபயணத்திற்கு பின் பூண்டி ஆண்டவர் சன்னதிக்கு வந்தேன். அங்கே இருந்த கடையில் தேனீர் அருந்திய பின்பு விசாரித்ததில் இந்த மாதத்தில் யாரும் மலை ஏற மாட்டார்கள், தனியாக செல்ல வேண்டாம் என கூறினார் கடைகாரர், இது என் இரண்டாவது பயணம் என்று சொல்லும் போது அவருக்கு ஆச்சரியமாக இருந்தது. கீழே இருந்த சன்னிதானத்தில் யாரும் இல்லாததால் ஒரு முறை சுற்றிவிட்டு மேலே ஏற கிளம்பினேன். நீண்ட இடைவேளைக்கு பிறகு மலையேறுவதால் சற்று சிரமமாக இருந்தது, பிள்ளையார் சன்னதி வரை தொடர்ச்சியாக ஏறிய பிறகு, அங்கிருந்த ஒருவர் என்னை அழைத்தார், அருகே சென்ற போது அவர் பெயர் புலவர்சாமி/சித்தர் என அறிமுகம் செய்துகொண்டார். சமையல் செய்திருப்பதாகவும் சற்று இளைப்பாற்றிவிட்டு செல்லுமாறு கேட்டுக்கொண்டார். வாழ்க்கையில் முதல் முறையாக அலுமினியத்தட்டில் சாப்பிட்டேன், பசித்து புசி என்ற பழமொழியின் அர்த்தத்தை அறிந்து கொண்டேன். பையில் இருந்த சில பொருட்களை அங்கேயே விட்டுவிட்டு பயணத்தை தொடர்ந்தேன்.


சென்றமுறை உச்சிவெயிலில் இருந்த மலை, இம்முறை அதற்க்கு நேர்மாறாக இருந்தது. கருமேகங்கள் சூழ இருட்டாக இருந்தது. என்னை சுற்றி யாரும் இல்லாததை இரசித்தேன், இயற்க்கையின் தாலாட்டும் குருவிகளின் சத்தம்/இசை மட்டுமே ஒலித்தன. சில மணி நேரங்களில் ஆண்டிசுனையைக்கு முன் கடைசி மலையில் மேல் பகுதி முழுவதும் மறைந்திருந்தன. சுனையில் சற்று இளைப்பாற்றிவிட்டு கையில் வைத்திருந்த பாட்டிலில் சற்று நீர் அருந்தினேன். கடைசி மலை மழையால் நன்றாக வழுக்கியது. வழுக்கு மரம் ஏறுவது போல் இருந்தது. இறுதியாக மேலே வந்தவுடன் சுயம்பு லிங்கத்தை பார்த்துவிட்டு, யாரேனும் இருக்கிறார்களா என்று பார்த்தேன். பூண்டியிலிருந்து கடைசி பேருந்து 6மணிக்கு என்பதால் சிறிது நேரத்தில் மலை இறங்க ஆரம்பித்தேன். ஒரு முப்பது அடி இறங்கிய பின்பு ஒரு குரல் என்னை அழைத்தது, மேலே பார்த்த பொழுது சித்தர் போல தோற்றமலித்த ஒருவர் தேனீர் அருந்தலாம் என்று கூறினார், இரவு இரயிலில் பிடிக்க இருப்பதால் இன்னொரு முறை என்று சொல்லிவிட்டு இறங்கினேன். அடைமழையில் நனைந்துக்கொண்டே இறங்கினேன். அவ்வப்பொழுதி காலில் ஏறிய அட்டைப்பூச்சிகளை அகற்றிக்கொண்டே மிக வேகமாக பிள்ளையார் கோவில் சென்றேன். அங்கிருந்த புலவர் சித்தரிடம் விடைப்பெற்றுக்கொண்டு பைகளை நிறப்பிக்கொண்டு இறங்கினேன். நவம்பர் மாதம் என்பதால் கீழே எந்த கடையும் திறக்கவில்லை, சென்ற முறை வந்த பொழுது குடிக்க மாம்பிழச்சாறு கிடைத்தது. டீ கடை மட்டும் இப்போது திறந்திருந்தது. இரண்டு டீ குடித்துவிட்டு  நன்றாக நனைந்திருந்ததால் வேறு உடை மாற்றிக்கொண்டு பேருந்துக்காக காத்திருந்தேன். அங்கே இருந்த வனக்காவலர்களிடம் பேச்சு கொடுத்ததில் இவ்விடம் காட்டுயானைகள் நடமாடும் பகுதி என்பதை அறிந்து கொண்டேன். குரங்குகள் கூட்டம் செய்யும் செஷ்டைகளை வேடிக்கை பார்த்துகொண்டிருக்கும் போதே பேருந்தும் வந்தது, கோவைக்கு ஒரு டிக்கேட் எடுத்துக்கொண்டு இரவு கோவை இரயில் நிலையத்தில் சேரன் எக்ஸ்பிரஸ் ஏறி காலை சென்னை வந்து சேர்ந்தேன்.



பி.கு.
இப்பயணம் நவம்பர் 2010 ல் சென்றது. டைரி குறிப்புகளை பார்த்து இப்போழுது எழுதுகிறேன்.

மலை ஏறி இறங்கும்வரை நான் மொத்தம் பார்த்த மக்களின் எண்ணிக்கை ஐந்து.

2 comments:

Paleo God said...

அருமை. நவம்பர் மாதம் தனியாக சென்று வந்தீர்களா? ஆச்சரியம்தான் :)))

அப்பொழுது எடுத்த புகைப்படங்கள்தானா? இவ்வளவு தெளிவாக சுற்றுப்புறங்கள் தெரிவதால் கேட்கிறேன்.

ravi said...

அந்த ஒரு புகைப்படத்தை தவிர மற்றதெல்லாம் நவம்பரில் எடுத்ததுதான் :) அது முதல்முறை செல்லும் போது எடுத்தது.

Post a Comment