Monday 29 April 2013

இரகசியம். சோழ ராஜ்ஜியத்தின் வரலாறு.

அத்தியாயம் 1: இரகசியம்



“ராஜாதி ராஜ, ராஜ மார்த்தாண்ட, ராஜகம்பீர, சோழ மண்டலாதிபதி பராந்தக  மகாராஜா, பராக்!” என்று ரவி முன் கூவினார்கள். அதை பார்த்துக்கொண்டிருந்த ரவிக்கு இது கண்டிப்பாக கனவாகதான் இருக்க முடியும் என்ற நம்பினான். தான் இதுவரை சினிமாவில் பார்த்த ராஜாக்கள் போல் அவர் இல்லை, தன் அருகே அவர் வருவதை உணர்ந்தான். “மகனே, சோழ குலத்து வீரப் புகழை இனி உன்”









ரவி தூக்கத்திலிருந்து எழுந்தான். “செ.. கனவா”, சுற்றி பார்த்த பொழுதுதான் தெரிந்தது அவன் இருக்கும் இடம் புதிதாக இருந்தது. எவ்வளவு யோசித்து பார்த்தும் எப்படி இங்கே வந்தோம் என்று அவனால் யூகிக்க முடியவில்லை, அவன் இருந்த அறை ஹாலிவுட் சினிமாக்களில் வரும் ஏதோ ஆய்வகம் போல் இருந்தது. தன்னை சுற்றி ஒரு கண்ணாடி திரை உள்ளதை அதில் இடித்துக்கொண்ட பின் தான் தெரிந்தது.

“யாராவது இருக்கீங்களா? நான் எங்க இருக்கேன் நீங்கயெல்லாம் யாரு? நீங்க நினைக்கிற மாதிரி நான் ஒன்னும் அவ்வளவு பெரிய ஆள் இல்ல, கதவ திறங்க” பூட்டிய கதவை நோக்கி தன்னால் முயன்றவரை கத்திக்கொண்டிருந்தான் ரவி.

தான் சிறைப்படுத்தப்பட்டுள்ள  அறையை சுற்றிப்பார்த்தான், காலியான அறையின் நடுவே ஒரு மேஜை மற்றும் இரு நாற்காலிகள் இருந்தன. அறை மேலிருந்த சிறிய இடைவெளி மூலம் வெளிச்சம் பரவியது. காலடி ஓசை கேட்டவுடன் “யாரா அது, விளையாடாதீங்கடா, ரூம திறந்து விடுங்கடா என்று புலம்பினான்.

கதவு திறக்கப்பட உள்ளே இருவர் நுழைந்தனர். “ சார், அந்த சேர்ல உட்காருங்க, எங்க பாஸ் உங்ககிட்ட பேச வர்றார்”

“மரியாதயெல்லாம் வேனாம்டா, என்ன இப்படியே விட்ருங்க, நான் அப்படியே ஓடிபோயிடுவேன்.” என்றான் இரவி. அவ்விருவர் மூலம் உட்காரவைக்கப்பட்டான்.

சில நிமிடங்களில் ஒருவர் வந்து மேஜையின் எதிரில் உட்கார்ந்தார். “வெல்கம் மிஸ்டர் இரவி, உங்களை சந்தித்ததில் ரொம்ப சந்தோஷம்”. “ யார் சார் நீங்க, ஒரு காரணமும் இல்லாம் என்ன இங்க கடத்திட்டு வந்து இப்ப என்னவோ நலம் விசாரிக்குறீங்க?”.ரவி வினவினான்.

என் பேர் இராமானுஜம், உங்ககிட்ட இப்ப சொல்ல போற விஷயத்தை கவனமா கேளுங்க.” நீங்க கனவு கான்பது உண்டா?” ரவி உடனே “என்ன சார் என்ன வெச்சு ஏதாவது காமடி பண்றீங்களா, நான் எங்க இருக்கேனு தெரியல, நீங்கயெல்லாம் யாரு, எதுக்கு இப்போ தேவயே இல்லாம இந்த கேள்வி” என்று கத்தினான்.”

“கொஞ்சம் பொறுமையா கேளுங்க, உங்க கனவ பத்தி நான் இப்போ சொன்னா நீங்க என்ன நம்புவீங்கனு நினைக்குறேன்.” இராமானுஜம் ரவி கண்ட கனவை கூட இருந்து பார்த்ததுபோல் விவரித்தார்.மேலும் “ரவி இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நீங்க பார்த்த நிகழ்வுகள் அனைத்தும் உண்மையே, கணவு இல்லை” என்று முடித்தார்.இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த ரவிக்கு ஒன்றுமே புரியவில்லை. இராமானுஜம் அடுத்து சொன்னதை கேட்டதும் ரவி திடுக்கிட்டான்.“நான் தான் அவர்னு நீங்க சொன்னீங்கனா நீங்க என்ன பைத்தியமா”. என்று கூறிய ரவிவை செய்கையில் அமைதியாய் இருக்க சொல்லி அவர் மேலும் தொடர்ந்தார்.

"நினைவு என்றால் என்ன?"

"ம்..ஞாபகப்படுத்தி கொள்ளுதல்"

"அதாவது குறிப்பிட்ட நபரின் நினைவு சரிதானே"

"ம்.."

"அந்த குறிப்பிட்ட நபர் மட்டும் இல்லாமல் அவருடைய முன்னோர்களின் நினைவும் அவனிடையே இருக்கும் என்று சொன்னால் நீங்கள் என்ன சொல்வீர்கள்."

"போன வாரம் நடந்தத பத்தி கேட்டாவே நான் யோசிப்பேன். நீங்க என்னனா, நம்புற மாதிரி சொல்லுங்க"

"மரபுசார் நினைவாற்றல். புலம்பெயர்வு . செயலற்றிருத்தல் இனப்பெருக்கம் இவையெல்லாம் விலங்குகளுக்கு யார் சொல்லித்தந்தது. என்னுடைய முப்பது ஆண்டுகால ஆராய்ச்சியில் கண்டுபிடித்ததுதான் இந்த மரபுசார் நினைவாற்றல். நம்முடைய மரபணுக்களில் நமது முன்னோர்களின் வழிமுறையையும் சேர்த்து, அவர்களின் நினைவுகளையும் நாம் கண்டறிய முடியும். அத்ற்க்கான பொறியையும் நான் கண்டுபிடித்துவிட்டேன்."

"நீங்க சொல்றது நம்பவும் முடியல, நம்பாவமும் இருக்க முடியல, அப்ப என்ன பத்தி சொன்னது உன்மைதானா?"

"உங்க மரபணுவும் அகழ்வாராய்ச்சியில் கிடச்ச அவரோட மரபணுவும் நூறு சதவிகிதம் சரியாக பொறுந்துகிறது.ஆமாம் மிஸ்டர் இரவி நீங்கதான் பல தலமுறைக்கு முன்னால் வாழ்ந்த "இராஜ இராஜ சோழன்." அவர்களுடைய வாரிசு. உங்களுடைய மரபணு நினைவுகள் மூலம் நாம் பல ரகசியங்களை கண்டுபிடிக்கலாம்."


அத்தியாயம் 2: பொறி




ஆச்சிரியத்தில் இருந்த  ரவியை ராமானுஜம் அவருடைய ஆய்வகத்திற்கு அழைத்து சென்றார்.  சில நிமிட நடைக்கு பிறகு அங்கு வந்தடைந்தார்கள்.  சுவர்கள் முழுவதும் கணிப்பொறித்திரைகள்  சூழ்ந்திருந்தன, நடுவில் ஒரு மேஜை கண்ணாடி மூடியுடன் இருந்தது. அங்கு ஒரு பெண் கையில் தொடுதிரை கணினி மூலம் சில அளவீடுகளை குறித்துக்கொண்டிருந்தாள். “மிஸ். திவ்யா, நாம் இவ்வளவு நாள் தேடிக்கொண்டிருந்தவர் இவர்தான், பெயர் ரவி,  ரவி, இவங்க தான் என்னோட இந்த  ஆய்விற்க்கு மிகவும் உறுதுனையா இருந்தாங்க.” என்றார்.


"நாம ரவிக்கு கொடுத்த மருந்து சரியா வேல செஞ்சுதா, குறிப்புகள் என்ன சொல்லுது" என்று திவ்யாவை பார்த்து கேட்டார்.

"மருந்தா.. என்ன சார் சொல்றீங்க. எனக்கு தெரியாம வேற என்ன கொடுத்தீங்க" பயத்துடன் ரவி வினவினான்.

"கவலபடாதீங்க ரவி, இது ஒரு சாதாரண மருந்து, நினைவாற்றலை அதிகப்படுத்தும் ஒருவகை ஸ்டெராய்ட். இதனால் ஒரு வித பின்விளைவுகளும் இல்லை.  உங்களுக்கு இந்த விஷயங்களை நிருபிக்காமல்  கூப்பிட்டிருந்தால் கண்டிப்பாக எங்களை பைத்தியம் என்று நினைத்திருப்பீர்கள். சரிதானே நான் சொல்வது. உங்கள் ஒத்துழைப்பு மட்டும் இருந்தால் நாம் அனைவரும் உலகத்திலுள்ள அனைத்தையும் விலைக்கு வாங்க முடியும்."

"அப்ப என் வேலை"

"அதபத்தி இப்ப ஏன் கவலை பட்றீங்க. உங்க சார்பா மெடிக்கல் லீவ் திவ்யா ஆபிஸுக்கு அனுப்பிட்டாங்க. உங்க ரூம்மேட்ஸ் கிட்டயும் நீங்க வெளியூருக்கு பொயிருக்குறதா சொல்லிட்டோம். நீங்க எத பத்தியும் கவலைப்பட வேண்டாம். நீங்க இப்ப ஓய்வெடுங்க. உங்களுக்கு தூக்கம்தான் இனிமே வேலை. ரவி இப்ப நீங்க இந்த மேஜையின் மேல் படுங்கள், இந்த கண்ணாடித்திரை  உங்களுடைய கனவுகளை பதிவு செய்யும். சென்ற முறை எங்கு உங்களுடைய கனவு நின்றது என்று நினைவிருக்கிறதா?"

"கனவா இல்லை நினைவா"

"சபாஷ்.  உங்களுடைய தற்போதய நினைவு நீங்கள் கானும் கனவை செயலிழக்கச்செய்கிறது. நீங்கள் காண்பது கனவுதான் என உங்கள் ஆழ்மனது காட்டிக்கொடுக்கிறது, நீங்கள் கனவு என்று சிறிது சந்தேகப்பட்டாலும்  உங்கள் நினைவுகள் மறுபடியும்  பழைய நிலை, அதாவது இப்பொதய காலத்திற்கு வந்துவிடுகிறது. நான் கண்டுபித்திருக்கு இந்த பொறி உங்களுடைய மரபணு நினைவுகளை பதிவுசெய்கிறது. ஒரு வேலை பதிவின்பொழுது தடைப்பட்டால், மீண்டும் விட்ட இடத்தில் இருந்து துவங்க இந்த பொறி உதவும்."
சாதரண மேஜை போன்ற தோற்றம் இருந்தாலும், அதன் கீழிருந்து எண்ணற்ற வயர்கள் மூலம் தகவல் சர்வர் அறைக்கு சென்றடைந்தது.

"திவ்யா, பொறியை தயார் படுத்து, இன்று ரவி காணப்போகும் சரித்திரம் , நம் வாழ்க்கையில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தப்போகிறது."

" ரவி, இந்த கண்ணாடிய இந்த மேஜையின் மீது படுக்கும் பொழுது அணிந்துகொள்ளுங்கள், உங்கள் விழித்திரை அசைவுகள் மூலம் தகவல்களை எங்களால் சேகரிக்க  முடியும்."

ரவி கண்ணாடியை அணிந்துகொண்டு மேஜையின் மீது சாய்ந்தான். திவ்யா அவள் கையிலிருந்த தொடுதிரையில் சில எண்களை அழுத்த மேஜையை சுற்றி ஒரு வெளிச்சம் உண்டாகியது. அப்பொறி உண்டாக்கிய மென்அதிர்வுகள் மூலம் ரவி உடனே மயங்கினான்.

"சார், ரவிகிட்ட உண்மையா நடந்த விஷயத்தை எப்ப சொல்லப்போறீங்க".

"அதுக்கான சரியான சமயம் வரும், அவசரப்படவேண்டாம். நம்முடைய திட்டம் நிறைவேறும் வரை காத்திருப்போம்… "

மகனே, சோழ குலத்து வீரப் புகழை இனி உன் உயிர் மூச்சாகவேண்டும். சோழர்களுடைய புகழ் உலகெங்கும் பரவ நீ அயராது உழைக்க வேண்டும். ”

தன் அப்பா சொல்ல கேட்டுக்கொண்டிருந்தான் அருண்மொழிவர்மன் (எ)  ராஜ ராஜ சோழன்.







அத்தியாயம் 3: இரத்த அரியணை




அடுத்த நாள் காலை

நீண்ட உறக்கத்திற்கு பிறகு எழுந்த ரவி, தன்னை பார்த்துக்கொண்டிருந்த ராமானுஜத்தை பார்த்து திடுக்கிட்டான். “என்ன சார், தூங்கிட்டுயிருக்கும் பொழுதும் என்ன கவனிக்குனுமா?” “இனி எப்பொழுதும் உன்னை கவனித்துக்கொண்டே இருக்க வேண்டும்” என பதிலளித்தார்.

நீங்க சொல்ற மாதிரி மரபணு நினைவுகள் செயல்பட்டா நாம சோழர்களுடைய அனைத்து ரகசியங்களையும் பெறலாம் என்றிருக்க, ஏன் ராஜ ராஜனுடைய பகுதியை மட்டும் கவனம் செலுத்துறீங்க.

சோழர்களுடைய வரலாறு முழுவதும் சொல்ல நேரமில்லை, சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் ராஜ ராஜ சோழன் (எ) அருண்மொழிவர்மன் ஆட்சியில் அமர்ந்த சரியான வரலாறு எங்கும் இல்லை, பரந்தக சோழனின் இறப்பிற்க்கு பிறகு முப்பது ஆண்டுகள் சோழர்களின் வரலாறு ஒரு மாயையாகவே இன்றும் இருக்கிறது, இந்த முப்பது ஆண்டுகளில்  ஐந்து மன்னர்கள்  சோழமன்னை ஆண்டுள்ளனர். இந்த இடைப்பட்ட காலத்தில் அருண்மொழிவர்மன்  எங்கிருந்தான், என்ன செய்துகொண்டிருந்தான், சோழர் ஆட்சியில் அவன் பங்கென்ன என பல கேள்விகள் எழுகின்றன.  ஐந்து மன்னர்களும் இயற்க்கைக்கு அப்பார்ப்பட்ட முறையிலேயே இறந்துள்ளனர், மன்னர்கள் மட்டும் இல்லாமல், அரசனாக தகுதி உள்ள அனைவரும் மர்மமானமுறையில் இறந்துள்ளனர், அருண்மொழிவர்மனை ஆட்சியில் அமர்வதற்க்காகவே அனைத்தும் நடந்ததுபோல் உள்ளது. இது வெறும் பதவியாசையாக இருப்பின் நடந்த விஷயங்கள் கண்டிப்பாக வரலாற்றில் இடம்பெற்றிருக்கும், ஆனால் எதுவும் இன்னால் வரை கிடைக்கவில்லை. கடைசியாக கிடைத்த தகவல்படி, அருண்மொழிவர்மன் தனியாக எதையும் செய்யவில்லை, அவனுக்கு உறுதுணையாக ஒருவர் இருந்துள்ளார். அவர் யார் என்பதை கண்டுபிடிப்பதே நமது முதல் குறிக்கோள். என சொல்லி முடித்தார் ராமானுஜம்.

“அவரை கண்டுபிடிப்பதால் நமக்கென்ன பயன்.”

“இன்னும் கொஞ்ச நாள் பொறுமையுடன் செய்ல்படுவோம், நம்முடைய வேலையை முதலில் முடிப்போம். இப்பொழுது அதை பற்றி யோசித்தால்  நம் முயற்சிக்கு நாமே குறுக்கிடுவதுபோல் ஆகிவிடும்.”

“வரலாறு இப்பொழுது நம் கையில், வெறும் பார்வையாளனாக இருந்த நீ,  செயலில் இறங்கும் நேரம் வெகுதூரமில்லை,

மரபணு நினைவோட்டத்திற்கு தயாராண ரவி, மேஜையின் மீது படுத்தான், சில நிமிடங்களில் அவனது மூளையின் செயல்பாடு பண்மடங்காக உயர்வதாக கணிப்பொறி காட்டியது.

 

மேஜையில் படுத்திருந்த ரவியை சரிபார்த்துவிட்டு சென்று கொண்டிருந்த திவ்யாவை அழைத்தார் ராமானுஜம்.

“மிஸ் திவ்யா, எல்லாம் சரியாக இருக்கிறதா”

“சார், இந்த அளவிற்க்கு யாரும் நம் பொறியில் பயணிக்கவில்லை, ரவியின் மூளை செயல்பாடுகள் திருப்திகரமாக உள்ளன, இன்னும் சில மணி நேரத்தில் அவருடைய மூளை மரபணு நினைவுகளின் மையத்தை நெருங்கிவிடும்.  இன்னும் ஒரிரு தினங்களில் நம் வெற்றி உறுதியாகிவிடும்.”

அவசரம் வேண்டாம், மரபணு நினைவுகளை ஒருவன் நெருங்கும் பொழுது அவனின் மூளையின் செயல்பாடு ஐம்பது சதவிகிதத்திற்கு  மேல் இருக்கும், அதுவே சாதாரண நேரத்தில் ஐந்து சதவிகிதத்திற்க்கு குறைவாகவே செயல்படும், இவ்வளவு வேறுபாடுகளை தாங்கிக்கொள்ளும் சக்திக்கு  கண்டிப்பாக  ஓய்வு அவசியம், ஒரு நாளில் ஐந்து நிமிடங்களுக்கு மேல் நாம் இந்த ஆய்வில் ரவியை உட்படுத்தகூடாது.இருந்தாலும், நினைவுலகத்தில் தொலைந்த  மற்றவர்களை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். இவன் தான் நமக்கு கிடைத்திருக்கும் அரிய வாய்ப்பு,  நாம் முன்பு செய்தது போல் தொடர் நினைவ்வோட்டம் இல்லாமல், முறையே ஓய்வுடன் கூடிய நினைவோட்டத்தை பதிவு செய்ய வேண்டும்.”

“அப்படி செய்தால் நீண்ட நாட்கள் ஆகுமே”

“அதுதான் இல்லை, மூளையின் அசாதாரண செயல்பாட்டினால், அந்த ஐந்து நிமிடங்களில் ஒரு வருடத்திற்க்கு மேலான நினைவுகளை பதிவிறக்க முடியும்.  என  உழைப்பிற்கு கூடிய விரைவில் பதில் கிடைக்க்ப்போகிறது.”

“வாழ்த்துக்கள் சார்”




“அருண்மொழிவர்மா, நம் திட்டத்தை அரங்கேற்ற தக்க சமயம் வந்துவிட்டது, நான் அளித்த பயிற்ச்சிகள் உனக்கு உறுதுணையாக இருக்கும், உன்னை ராஜ்ஜியத்தில் அமரவைக்கும் இந்த திட்டம் நிறைவடைய இன்னும் இருபது ஆண்டுகள் உள்ளன,  இந்த இருபது ஆண்டுகளில் நீ அழிக்கப்போகும் உயிர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் உன் ராஜவாழ்க்கை இருக்கும். முதலில் நீ அழிக்கப்போவது உன் உடன்பிறந்தவன்.அவன் இருக்கும் வரை உன்னால் சிம்மாசனத்தில் அமர முடியாது, நீ செய்யப்போவது கொலைகள் அல்ல, உன் மூதாதயர்களின் வழியில், தகுதியற்றவனை ஆட்சியில் அமரவிடுவதை தடுக்க நீ செய்யும் வதம், களைப்பறிப்பு, வெற்றி உனக்கே. சென்று வா ”

“அப்படியே ஆகட்டும் “ எனக்கூறி குருவை வணங்கி விடைபெற்று சென்றான்.


தொடரும்…       tbc..

போன வருட விடுமுறையில் ஏற்கனவே எழுதிய பதிவு, மீண்டும் எழுத ஆர்வம் எழுகிறது, தவறாமல் ஏதாவது கமண்ட் செய்யவும். அட்லீஸ்ட் திட்டிட்டாவது போங்க.. இவையாவும் கற்பனையே.

inspired from kalki...

3 comments:

Anonymous said...

Very interesting...

- Kiri

ravi said...

thanks for the comment ..kiri

Unknown said...

அற்புதமான தொடக்கம், தெளிவான வர்ணனை. திறமை புதைக்க படவேண்டாம்... தொடருங்கள். வாழ்த்துக்கள்.

Post a Comment